மியான்மார் எதிர்க்கட்சித் தலைவர் சு கி நாடாளுமன்றத்தில் உரை
ஜூலை09,2012. மியான்மாரில் மக்களாட்சியைக் கொண்டு வருவதற்கு சுமார் 25 ஆண்டுகளாகப் போராடி
வரும் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு கி, நாட்டுக்காகத் தன்னால் இயன்ற
அனைத்தையும் செய்வதாக நாடாளுமன்றத்தில் உறுதி கூறினார். மியான்மார் நாடாளுமன்றத்தில்
முதன்முறையாக உரையாற்றிய சு கி, தற்போதைய அரசுத் தலைவர் தெய்ன் செயினுக்குத் தொடர்ந்து
ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கூறினார். 1991ம் ஆண்டின் அமைதி நொபெல் விருதைப் பெற்ற
சு கி, அதனை அண்மையில்தான் நேரடியாகப் பெற்றுக் கொண்டார்.