2012-07-09 16:47:37

மங்கோலியா கத்தோலிக்கத் திருஅவை 20 ஆண்டுகளைச் சிறப்பிக்கின்றது


ஜூலை09,2012. மங்கோலியாவில் கத்தோலிக்கத் திருஅவை வேரூன்றப்பட்டதன் 20ம் ஆண்டு நிறைவு இஞ்ஞாயிறன்று Ulan Bator பேராலயத்தில் ஆடம்பரத் திருப்பலி மூலம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விசுவாசப்பரப்புப் பேராயச் செயலர் பேரருட்திரு Savio Hon Tai Fai, தென் கொரியாவின் Daejeon ஆயர் Lazarus You Heung-sik உட்பட அரசு மற்றும் சமய அதிகாரிகள் பலர் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.
மங்கோலியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் உறுப்பினர்கள் கடந்த 20 ஆண்டுகளில் பூஜ்யத்திலிருந்து 800 ஆக உயர்ந்துள்ளனர்.
வருகிற அக்டோபர் 7ம் தேதிவரை இடம்பெறும் இக்கொண்டாட்டங்களின் இறுதியில், இந்த இருபதாம் ஆண்டின் நிறைவாக மங்கோலியக் கத்தோலிக்கர் ஒரு மரத்தையும் நடவுள்ளனர்.
1991ம் ஆண்டில் மங்கோலியாவில் கம்யூனிச ஆட்சி வீழ்ந்த போது ஒரு கத்தோலிக்கர்கூட அங்கு இல்லை. 1992ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் அமைப்பு சமய சுதந்திரத்தை அங்கீகரித்தது. தற்போது 22 நாடுகளைச் சேர்ந்த 81 மறைப்பணியாளர்கள் அங்கு உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.