2012-07-09 16:49:44

இலங்கையில் கடந்த 6 மாதங்களில் 650 பேர் கடத்தப்பட்டுள்ளனர்! சண்டே ரைம்ஸ்


ஜூலை09, 2012. இலங்கையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 650 பேர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையொன்றை மேற்கோள்காட்டி சண்டே ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாளொன்றுக்கு ஏறத்தாழ 4 பேர் கடத்தப்பட்டுள்ளதாக இச்செய்தி மூலம் தெரிய வருகிறது.
கடந்த வருடத்தில் மட்டும் இலங்கையில் 15,000 பேர் காணாமல் போயுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய-பசிபிக் வலயம் தொடர்பான 2011ம் ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இடம்பெற்றுவரும் கடத்தல்களுடன் பாதுகாப்புத் தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டிருக்கின்றனர் என அண்மையில் வெளியான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை தொடர்பான அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.







All the contents on this site are copyrighted ©.