2012-07-06 16:03:40

ஜூலை 07, 2012. கவிதைக் கனவுகள்...... நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் புதிய சமுதாயம்


பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்;
பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்;
கூட்டாளி வர்க்கங்கள் குணம்மாற வேண்டும்;
குற்றேவல் தொழிலென்ற மனம்மாற வேண்டும்;
வீட்டொடு தான்மட்டும் சுகமாக உண்டும்
வேறுள்ளோர் துன்பங்கள் கண்ணாரக் கண்டும்
நாட்டோடு சேராத தனிபோக உரிமை
நடவாதிங் கினியென்று நாமறிதல் பெருமை.








All the contents on this site are copyrighted ©.