2012-07-06 16:02:27

கென்ய முஸ்லீம் குழுக்கள் கிறிஸ்தவ ஆலயங்களைப் பாதுகாப்பதற்கு உறுதி


ஜூலை06,2012. கென்யாவில் இஞ்ஞாயிறன்று முஸ்லீம் தீவிரவாதிகளால் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டதையடுத்து அந்நாட்டில் ஆலயங்களைப் பாதுகாப்பதற்கு முஸ்லீம் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
கென்யாவின் Garissaவில் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் படுகொலைகள் நடத்தப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுத்த உள்ளூர் முஸ்லீம் தலைவர்கள், அந்நாட்டில் பிற கிறிஸ்தவ ஆலயங்களைப் பாதுகாப்பதற்கு தன்னார்வக் குழுக்களை நியமனம் செய்வதற்கு உறுதி அளித்துள்ளனர்.
Garissa நகரத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்துப் பேசிய கென்ய முஸ்லீம்கள் உயர் அவைத் தலைவர் Adan Wachu, கென்யாவில் மதவாதப் பிரிவினைகள் ஏற்படுவதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லீம் சமுதாயம் விரும்பவில்லை என்று அறிவித்தார்.
Garissa நகரத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டதற்கு, சொமாலியாவைச் சேர்நத al-Shabab என்ற இசுலாமிய தீவிரவாதக் குழுவே காரணம் என்று பொதுவாக நம்பப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.