2012-07-06 16:02:38

இந்தியாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்குவதற்கு அரசு திட்டம்


ஜூலை06,2012. இந்தியாவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்குவதற்கு நடுவண் அரசு திட்டமிட்டு வருவதாக நலவாழ்வு அமைச்சக அதிகாரி ஒருவர் அறிவித்தார்.
மாநில அரசுகளுடன் சேர்ந்து நடுவண் அரசு எடுத்திருக்கும் இத்திட்டத்தில் 27,000 கோடி ரூபாய்ச் செலவில் இலட்சக்கணக்கான மக்களுக்கு இலவச மருந்துகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி மேலும் கூறினார்.
இதற்கிடையே, இந்திய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் இலவச மருந்துகள் வழங்குவது இந்தியாவின் மிக முக்கியமான கொள்கை என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஜூனில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் அக்டோபர் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வழங்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டத்தின்கீழ் இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் 22 விழுக்காட்டினர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.