ஜூலை03,2012. மனிதரின் நலவாழ்வுக்குப் பெரும் ஆபத்தாக இருக்கும் பாதரசத்தின் பயன்பாட்டைக்
குறைப்பதற்கு உலக அளவில் உடன்படிக்கை ஒன்று கொண்டுவரப்படுவதற்கு 500க்கும் மேற்பட்ட அரசு
மற்றும் பொது நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. உருகுவாய் நாட்டின் Punta del Este
வில் ஐ.நா.வின் ஆதரவுடன் 6 நாள் கூட்டம் நடத்தி வரும் இந்நிறுவனங்கள், தங்கச் சுரங்கங்களிலும்
மற்ற தொழில்நுட்பங்களிலும் பாதரசம் பயன்படுத்தப்படுவதைக் குறைப்பதற்கு நடைமுறை வழிகாட்டிகளை
உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றன. அண்மை நிதிநெருக்கடிகளின் மத்தியிலும் தங்கத்தின்
மதிப்பு அதிகரித்துள்ளவேளை, உலகில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 கோடியே 20 இலட்சம்
முதல் 1 கோடியே 50 இலட்சம் பேர் வரை தங்கத்தைப் பரித்து எடுக்கும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளனர்.