2012-07-03 14:34:49

கென்யாவில் நடைபெற்ற தாக்குதல்களுக்குக் காரணம் அரசியல் நோக்கங்களே - Garissa ஆயர் Paul Darmanin


ஜூலை03,2012. கென்யாவின் Garissaவில் இஞ்ஞாயிறன்று நடைபெற்ற தாக்குதல்களை ஒரு சமயப் பிரச்சனையாக தான் கருதவில்லை என்று Garissa ஆயர் Paul Darmanin கூறினார்.
Garissaவில் இஞ்ஞாயிறன்று ஒரு கத்தோலிக்கக் கோவிலிலும், மற்றொரு கிறிஸ்தவக் கோவிலிலும் நிகழ்ந்த தாக்குதல்கள், சோமாலியாவில் Shabaab என்ற அடிப்படைவாதக் குழுவினரை அடக்க கென்யாவின் இராணுவம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் எதிரொலியாக, Somali Shabaab என்ற அடிப்படைவாதக் குழுவினர் மேற்கொண்ட முயற்சியாக இருக்கலாம் என்று ஆயர் Darmanin, Fides செய்தி நிறுவனத்திடம் விளக்கினார்.
ஆறுதல்களின் அன்னை மரியா கத்தோலிக்கக் கோவிலை நோக்கி எறியப்பட்ட இரு குண்டுகளில் ஒன்று மட்டும் வெளியில் வெடித்தது என்றும், மற்றொரு கிறிஸ்தவக் கோவிலில் தாக்குதல்கள் தீவிரமாக அமைந்ததால், அங்கு 16 பேர் கொல்லப்பட்டனர், இன்னும் பலர் காயமடைந்தனர் என்றும் ஆயர் Darmanin கூறினார்.
இவ்வன்முறைகளுக்குக் காரணம் அரசியல் என்றால், ஏன் கோவில்கள் தாக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஆயர் Darmanin, கென்யா சோமாலியா எல்லைகளுக்கு அருகில் Garissa இருப்பதாலும், கோவில்களிலிருந்து எதிர் தாக்குதல்கள் இருக்காது என்பதாலும், கிறிஸ்தவக் கோவில்கள் வன்முறைகளைச் சந்தித்து வருகின்றன என்று விளக்கம் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.