தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை என்று சொல்லப்படும் திண்ணையில் சி.ஜெயபாரதன் தமிழாக்கத்தில்
பதிவான கலில் கிப்ரான் கவிதைகளில் ஒன்று... மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம்
: சி. ஜெயபாரதன், கனடா
எனக்குத் தெரிகிறது இப்போது! தனக்கெனச் செல்வம் மட்டும்
சேமித்து உடைமை ஆக்குவோர் இடர்ப் படுவர் துயர்ப் பட்டு!
மலர்களின் வாழ்வே நம்பிக்கை, மன
நிறைவு, அமைதி கண்ணீரும் புன்னகையும் பின்னிய வாழ்வு!
நீர் மறைகிறது ஆவியாகி! மேலே
ஏறுகிறது முகிலாய் மாறி மலைகள் மீதும் பள்ளத்திலும் படியும் வரை!
தென்றலைச்
சந்தித்ததும் மண்மீது மழையாய்ப் பொழிந்து சென்றிடும் நதியாய் கடல் நோக்கி வழி
நெடுவே சிந்து பாடிக் கொண்டு!
முகில்களின் வாழ்வே விடை பெறும் வாழ்வு! மீண்டும் ஐக்கிய
மடையும் வாழ்வு! கண்ணீரும், புன்னகையும் பின்னிய வாழ்வு!