திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்துக்குப் புதிய தலைவர்
ஜூலை,02,2012. திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் கர்தினால் William Joseph
Levada அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அப்பேராயத்தின் புதிய தலைவராக
Regensburg ஆயர் Gerhard Ludwig Müller அவர்களை நியமித்துள்ளார். பேராயர் என்ற நிலைக்கு
உயர்த்தப்பட்டு இப்பொறுப்பை ஏற்கவுள்ளார் ஆயர் Gerhard Ludwig Müller. “Ecclesia Dei”
என்ற பாப்பிறை ஆணையம், அனைத்துலக விவிலிய ஆணையம், அனைத்துலக இறையியல் ஆணையம் ஆகியவற்றுக்கும்
பொறுப்பாக இருந்தவர் பணி ஓய்வுபெறும் கர்தினால் லெவாடா. 1947ம் ஆண்டு டிசம்பர் 31ம்
தேதி ஜெர்மனியின் Mainzல் பிறந்த ஆயர் Müller, 1978ம் ஆண்டு குருவாகவும், 2002ம் ஆண்டு
ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.