2012-07-02 15:12:44

கவிதைக் கனவுகள் வாழ்க்கை


வாழ்க்கை வாழ்வதற்கே என்றார்கள்
வாழத் தொடங்கினால்
தினம் ஒரு போராட்டம்
தினம் ஒரு சவால்

வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்றார்கள்
வாழத் தொடங்கினால்
தினம் ஓர் எதிர்ப்பு
தினம் ஓர் ஏமாற்றம்

சும்மா இருப்பதே சுகம் என்றார்கள்
சும்மா இருந்தால்
தினம் ஒரு புலம்பல்
தினம் ஒரு நோய்

வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் என்றார்கள்
வாழ்க்கை, அது வாழ்வு முழுவதும் சந்திக்கும்
அனுபவங்களின் தொகுப்பு என்றார்கள்
நாளுக்கொரு மாற்றம்
நிமிடத்துக்கொரு மாற்றம்
நிகழும் உலகத்தில்
நான் அந்தந்த நேரத்தில்
செய்வதை வைத்து
சொல்வதை வைத்து
தீர்ப்பிடப்படுகிறேன் சமூகத்தில்.
இந்த நல்லதோர் உணர்வை
வாழ்க்கை கற்றுத் தந்தது
வாழ்வது ஒரு கலை
வாழ்க்கை ஒரு சவால்







All the contents on this site are copyrighted ©.