Itangar மறைமாவட்டத்தில் பல புதுமைகள் இடம்பெற்று வருகின்றன : ஆயர் Kattrukudiyl
ஜூன்30,2012. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள Itangar மறைமாவட்டத்தில் குணப்படுத்தும்
பல புதுமைகள் இடம்பெற்றுவரும் அதேவேளை, அம்மறைமாவட்டத்தில் கத்தோலிக்கரின் எண்ணிக்கையும்
40 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று அம்மறைமாவட்ட ஆயர் John Kattrukudiyl கூறினார். ஜெர்மனியின்
Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்தில் நடந்த கூட்டத்தின்போது இவ்வாறு கூறிய
ஆயர் Kattrukudiyl, வார்த்தையால் விவரிக்கப்படமுடியாத பல புதுமைகள் செபத்தினால் நடைபெறுகின்றன
என்று பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் ஒதுக்குப்புறத்திலுள்ள இந்த மறைமாவட்டத்தில்
கத்தோலிக்கரின் எண்ணிக்கை, கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக 40 விழுக்காடு அதிகரித்துள்ளதற்கு
இந்த அற்புதங்கள் முக்கிய காரணம் என்று ஆயர் Kattrukudiyl கூறினார். திருஅவையின் மனிதாபிமானப்
பணிகளைப் பாராட்டுவதற்கு அரசியல்வாதிகள் ஒருபோதும் தவறியதில்லை என்பதையும் ஆயர் சுட்டிக்காட்டினார்.