2012-06-28 15:37:54

கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையும், Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் நிகழ்வுகள்


ஜூன்,28,2012. கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையும், Constantinople ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகள் குழுவும் இவ்வியாழன், வெள்ளி ஆகிய இருநாட்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளை வத்திக்கான் அறிவித்துள்ளது.
1969ம் ஆண்டு, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான திருப்பீட அலுவலகத்தின் தலைவராக இருந்த கர்தினால் Johannes Willebrands, புனித அந்திரேயாவின் பெருவிழாவன்று Constantinopleக்குச் சென்றதைத் தொடர்ந்து, Constantinople ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே உறவுப் பரிமாற்றங்கள் ஆரம்பமாயின.
ஐரோப்பிய ஒன்றிய ஆர்த்தடாக்ஸ் சபையின் இயக்குனரும், பிரான்ஸ் பெருநகர் சபைத் தலைவருமான Emmanuel Adamidis தலைமையில் வத்திக்கான் வந்திருக்கும் இப்பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களைத் திருத்தந்தை இவ்வியாழன் நண்பகல் சந்தித்து உரையாற்றினார்.
இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் தலைமையில் நடைபெறும் ஆடம்பரத் திருப்பலியின்போது, இக்குழுவினர் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் சிறப்பு பார்வையாளர்களாக இருப்பர்.
தொடர்ந்து, இக்குழுவின் அங்கத்தினர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையுடன் உரையாடல்களை மேற்கொள்வர்.








All the contents on this site are copyrighted ©.