பேராயர் Augustine Di Noia "கடவுளின் திருஅவை" என்ற திருப்பீட
அவையின் உபத்தலைவராக நியமனம்
"கடவுளின் திருஅவை" (“Ecclesia Dei”) என்ற திருப்பீட அவையின் உபத்தலைவராக பேராயர் Augustine
Di Noia அவர்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நியமித்துள்ளார். பழமைப் பாரம்பரிய
எண்ணங்களில் உறுதிகொண்டு, கத்தோலிக்கத் திருஅவையுடன் உறவுகளைத் துண்டித்துள்ள பல சபைகளை
மீண்டும் திருஅவையுடன் இணைக்கும் ஒரு முயற்சியாக, 1988ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை
இரண்டாம் ஜான்பால் அவர்களால் "கடவுளின் திருஅவை" என்ற திருப்பீட அவை உருவாக்கப்பட்டது.
இந்த அவை 2009ம் ஆண்டு விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் ஓர் அங்கமாக திருத்தந்தை
16ம் பெனடிக்ட் அவர்களால் இணைக்கப்பட்டது. விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவரான
கர்தினால் William Levada, இத்திருப்பீட அவையின் தலைவராகவும் பணியாற்றுகிறார். இத்திருப்பீட
அவையின் உபத் தலைவராக தொமினிக்கன் துறவுச் சபையைச் சேர்ந்த பேராயர் Di Noia அவர்களைத்
திருத்தந்தை நியமித்துள்ளதாக விசுவாசக் கோட்பாட்டு பேராயம் இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது. இந்த
நியமனத்திற்கு முன்னதாக, பேராயர் Di Noia திருவழிபாட்டுப் பேராயத்தின் செயலாராகப் பணியாற்றியவர்
என்பது குறிப்பிடத்தக்கது.