2012-06-25 14:37:30

"நைஜீரிய வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கு இந்த ஜூன் மாதம் இரத்தம் சிந்தும் மாதமாக அமையும்" - Boko Haram


ஜூன்,25,2012. நைஜீரியாவில் வாழும் அப்பாவி பொதுமக்களைக் காப்பாற்றவும், அடிப்படைவாதக் குழுக்களின் வன்முறைகளால் மற்ற குழுக்கள் வன்முறையில் இறங்குவதைத் தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நைஜீரியாவில் உள்ள திருஅவையும் ஏனைய கிறிஸ்தவ சபைகளும் விண்ணப்பித்துள்ளன.
"நைஜீரிய வரலாற்றில் கிறிஸ்தவர்களுக்கு இந்த ஜூன் மாதம் இரத்தம் சிந்தும் மாதமாக அமையும்" என்று கடந்த சில நாட்களாய் நைஜீரியாவில் உள்ள Boko Haram என்ற அடிப்படைவாதக் குழுவினர் விடுத்துவரும் எச்சரிக்கையினைத் தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புக்கள் பலவும் இணைந்து அரசிடம் விண்ணப்பித்துள்ளன.
நைஜீரியாவில் கடந்த சில வாரங்களாய் நிகழ்ந்து வரும் வன்முறைகளாலும், எதிர் வன்முறைகளாலும் உயிர் இழந்துள்ள இஸ்லாமியக் குடும்பங்களிலிருந்து மகனையோ, மகளையோ தற்கொலைப் படையினராய் தாங்கள் உருவாக்கிவருகிறோம் என்று Boko Haram குழுவினர் கூறி வருகின்றனர்.
இந்த வன்முறை கும்பலுடன், பன்னாட்டு வன்முறை கும்பலான அல் கெய்தாவுக்குத் தொடர்பு இருப்பதாலேயே Boko Haram இதுபோன்ற எச்சரிக்கைகளைத் துணிவுடன் வெளியிட்டு வருகின்றனர் என்று நைஜீரியாவில் உள்ள ஓர் அரசு சாரா அமைப்பு Fides செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.