2012-06-23 15:42:21

சுற்றுச்சூழல் என்ற கடவுளின் தோட்டத்தில் நாம் உடன் பணியாளர்கள் : தென் கொரிய ஆயர்


ஜூன்23,2012. சுற்றுச்சூழல் இறைவனின் கொடை என்பதை உணர்ந்து அதனைப் பாதுகாப்பதற்குக் கத்தோலிக்கர் பொறுப்பேற்க வேண்டுமென்று தென் கொரிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
தென் கொரியச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட கொரிய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon, நம் ஆண்டவர் நம்மை நினைத்துப் பெருமைப்படும்படியான பசுமையான புதிய சமுதாயத்தைச் சமைப்பதற்கு கத்தோலிக்கர் தங்களை அர்ப்பணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இக்காலத்தில் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சுற்றுச்சூழல் மிகவும் சேதமடைந்துள்ளதால் கத்தோலிக்கர், சுற்றுச்சூழலைச் சேதப்படுத்தாமல் செயல்படுமாறு ஆயர் தனது செய்தியில் கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.