பெண்கள் வாழ்வதற்கு மோசமான இடம் இந்தியா, புதிய அறிக்கை
ஜூன்22,2012. பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், அடிமைத்தனம் ஆகிய மூன்றும் இந்தியாவை,
பெண்கள் வாழ்வதற்கு மோசமான இடமாக ஆக்குகின்றன என்று பன்னாட்டு வல்லுனர்கள் கூறுகின்றனர். பெண்கள்
வாழ்வதற்குச் சிறந்த இடமாக கானடாவை அறிவித்துள்ள அவ்வல்லுனர்கள், சவுதிஅரேபியா, இந்தோனேசியா,
தென்னாப்ரிக்கா, மெக்சிகோ, துருக்கி ஆகிய நாடுகள்கூட இவ்விவகாரத்தில் இந்தியாவைவிட நன்றாக
இருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர். பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து 165 நாடுகளில்
எடுக்கப்பட்ட ஆய்வில், இந்தியா 141வது இடத்தில் இருப்பதாக Newsweek இதழ் வெளியிட்ட புள்ளி
விபரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் பெண்களும் சிறுமிகளும் உடைமைப் பொருள்களாக விற்கப்படுவது
தொடர்ந்து இடம்பெறுவதாகவும், சிறுமிகள் சுமார் 10 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்படுவதாகவும்,
வரதட்சணை தொடர்பாகப் பெண்கள் உயிரோடு எரிக்கப்படுவதாகவும், வீட்டுவேலைகளின்போது இளஞ்சிறுமிகள்
பாலியல்ரீதியாகப் பயன்படுத்தப்படுவது தொடர்ந்து காணப்படுவதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.