கவிதைக் கனவுகள்............. மானுடம் ஒரே குடும்பம் என்கிறார் பாரதிதாசன்
பிரிவிலை எங்கும் பேதமிலை எங்கும் பாரடா இப்புவி மக்களை, பாரடா உனது மானிடப்பரப்பை, பாரடா
உன்னுடன் பிறந்த பட்டாளம், என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய, மக்கள் பெருங்கடல்
பார்த்து மகிழ்ச்சி கொள் அறிவை விரிவு செய், அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு
மக்களை அணைந்து கொள், உன்னைச் சங்கமம் ஆக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு பிரிவிலை
எங்கும் பேதம் இல்லை.