2012-06-22 16:43:11

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சைகள் கிடைப்பதற்குத் திருப்பீடச் செயலர் வேண்டுகோள்


ஜூன்22,2012. உலகில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பராமரிப்பும், அவர்களுக்கு இலவச சிகிச்சைகள் கிடைப்பதற்கும் ஆவன செய்யப்படுமாறு திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே பன்னாட்டு சமூகத்திற்கு அழைப்பு விடுத்தார்.
முதலில் இந்த உதவியை எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ள தாய்மார் மற்றும் குழந்தைகளிலிருந்து தொடங்குவோம் என்றும் கேட்டுக்கொண்டார் கர்தினால் பெர்த்தோனே.
உரோம் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு ஏற்பாடு செய்த எய்ட்ஸ் நோய் குறித்த 8வது அனைத்துலக கருத்தரங்கில் இவ்வெள்ளியன்று பேசிய கர்தினால் பெர்த்தோனே, தங்களுக்கென்று பேசுவதற்கு யாரும் இல்லாத நிலையில் துன்புறும் பலருக்காக, திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பெயரால் இக்கூட்டத்தில் தான் கேட்பதாகவும் கூறினார்.
நாள்களைக் கடத்தாமல் இதற்குத் தேவையான வளங்களை முதலீடு செய்யுமாறும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கருத்தரங்கில் கினி நாட்டு அரசுத்தலைவரின் மனைவி, 20 ஆப்ரிக்க அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.