2012-06-20 16:27:36

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதியைத் திருத்தந்தை பார்வையிடுவார்


ஜூன்,20,2012 மேமாதம் இருமுறை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Emilia Romagna பகுதியைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அடுத்த வாரம் செவ்வாயன்று பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26 செவ்வாயன்று காலை 9 மணியளவில் வத்திகானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பும் திருத்தந்தை, 10 மணியளவில் San Marino di Carpi என்ற திடலைச் சென்றடைவார்.
அங்கிருந்து வாகனம் வழியே பயணத்தைத் தொடரும் திருத்தந்தை, நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அலேக்சாந்திரியாவின் புனித கத்தரீனா ஆலயத்தைப் பார்வையிடுவார்.
பின்னர் அந்நகர மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து உரை வழங்கியபின், மீண்டும் மதியம் ஒரு மணியளவில் வத்திக்கானுக்குத் திரும்புவார்.








All the contents on this site are copyrighted ©.