2012-06-20 16:29:00

உலகிலேயே மிக அதிக அளவுத் திறன் கொண்டிருப்பவர் ஒரு தமிழ் நாட்டுச் சிறுமி


ஜூன்,20,2012 IQ எனப்படும் அறிவுத்திறன் அளவில் உலகிலேயே மிக அதிக அளவுத் திறன் கொண்டிருப்பவர் ஒரு தமிழ் நாட்டுச் சிறுமி என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பாளயம்கோட்டையில் வாழும் விஷாலினி என்ற 11 வயது சிறுமி உலகிலேயே மிக அதிக அளவு அறிவுத் திறன் பெற்றவர் என்று கூறப்படுகிறார்.
இவருக்கு தற்போது 11 வயதே நிறைந்துள்ளதால், இவரது உலகச்சாதனை தற்போது கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெறாது என்றும், இவருக்கு 14 வயதாகும்போதே இந்தச் சாதனை இடம்பெறும் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.
எட்டாம் வகுப்பில் பயிலும் விஷாலினி, கணனியில் அபூர்வ அறிவுபெற்றவராய் இருக்கிறார். இவரது அறிவுத்திறனால், பல பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு சொற்பொழிவுகள் வழங்கி வருகிறார்.
தற்போது உலக அளவில் மிக உயர்ந்த அறிவுத்திறன் கொண்டவர் என்று கருதப்படுபவர் கொரியாவைச் சேர்ந்த Kim Ung-Yong. இவரது அறிவுத் திறன் அளவு 210. இதுவே தற்போது உலகச்சாதனையாக உள்ளது. விஷாலினியின் அறிவுத்திறன் அளவு 225 என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் அறிவுத்திறன் அளவு 160 என்றும், லியோனார்டோ டாவின்சியின் அறிவுத்திறன் 200 என்றும் சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.