2012-06-18 15:23:38

உலகம் பாலைவனமாவதைத் தடுக்கும் உலக நாளுக்கு ஐ.நா.பொதுச் செயலர் வெளியட்ட செய்தி


ஜூன்,18,2012. நலமான மண்வளம் இல்லாமல், பூமிக்கோளத்தைக் காப்பாற்றுவது கடினம் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
உலகம் பாலைவனமாவதைத் தடுக்கும் உலக நாள் ஜூன் 17 இஞ்ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியட்ட பான் கி மூன், மண்வளத்தின் மதிப்பு ஒவ்வோர் ஆண்டும் குறைந்து வருவதன் ஆபத்தை எடுத்துரைத்தார்.
ஜூன் 20, வருகிற புதனன்று பிரேசில் நாட்டு, ரியோ டி ஜெனீரோவில் துவங்கவிருக்கும் அனைத்துலக ஐ.நா.மாநாட்டைக் குறித்துப் பேசிய பொதுச் செயலர், பூமிக்கோளத்தைக் காக்கும் வழிகளில் நமது முன்னேற்றத் திட்டங்கள் அமையவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மண்வளத்தைக் காக்கும் பல பாரம்பரிய மற்றும் புதுவகைத் திட்டங்களை உலகறியச் செய்து அனைத்து நாடுகளும் பயனடைவதற்கு Rio+20 பூமிக்கோள உச்சிமாநாடு நல்லதொரு தருணமாய் அமையும் என்ற தன் நம்பிக்கையையும் பான் கி மூன் தன் செய்தியில் வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.