இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பது சிறார்களின்,
மனங்களிலிருந்த போரின் வடுக்கள் ஆறுவதைத் தடுக்கிறது
ஜூன்16,2012. இலங்கையில் போர் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பது
சிறார்களின், மனங்களிலிருந்த போரின் வடுக்கள் ஆறுவதைத் தடுக்கிறது என Save the Children
அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி மேனகா கல்யாணரத்தினா தெரிவித்துள்ளார். இலங்கைத்தீவில்
போர் இடம்பெற்ற பகுதிகளில் சிறார்களின் நிலவரம் குறித்த நிகழ்ச்சியொன்றில் ஆஸ்திரேலிய
ஊடகமொன்று கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது இத்தகவலை அவர் தெரிவித்தார். இலங்கையில்
போர் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவத்தினர் தொடர்ந்து இருப்பது சிறார்களின், மனங்களிலிருந்த
போரின் வடுக்கள் ஆறுவதை தடுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.