2012-06-14 16:54:51

உலகில் தேவையான அளவு உணவு இருந்தாலும் அது சரிவரப் பகிரப்படுவதில்லை - திருத்தந்தை


ஜூன்,14,2012. உலகில் தேவையான அளவு உணவு இருந்தாலும், அரசியல், பொருளாதார, சமுதாயத் தடைகள் பெருகியுள்ளதால், இந்த உணவு சரிவரப் பகிரப்படுவதில்லை என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
FAO எனப்படும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் இயக்குனர் José Graziano da Silva, அவர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, உலகில் நிலவும் உணவு பற்றாக்குறை பற்றி அவருடன் பேசினார்.
உலகின் பல பகுதிகளில், சிறப்பாக ஆப்ரிக்கக் கண்டத்தில் வறுமையையும், பசியையும் போக்க திருஅவை எடுத்துவரும் முயற்சிகளுக்காக FAO இயக்குனர் தன் பாராட்டுக்களைத் திருத்தந்தைக்குத் தெரிவித்தார்.
உணவுப் பொருட்களின் பரிமாற்றம் உலகெங்கும் தகுந்த வகையில் நடைபெற வேண்டும் என்று இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.
திருதந்தையைச் சந்தித்தபின், FAO இயக்குனர் da Silva, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே, மற்றும் திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார்.









All the contents on this site are copyrighted ©.