வேளாண்மை, நிலையான சமூகங்கள் குறித்த திருப்பீட நிகழ்வு
ஜூன் 09,2012. பிரேசில் நாட்டு ரியோ டி ஜெனிரோவில் இம்மாதம் 20 முதல் 22 வரை நடைபெறவிருக்கும்
நீடித்த வளர்ச்சி குறித்த Rio+20 என்ற உச்சிமாநாட்டையொட்டி திருப்பீடமும் இம்மாதம் 19ம்
தேதி ஒரு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக
காரித்தாஸ், அனைத்துலக பிரான்சிஸ்கன் அமைப்பு, அனைத்துலக வளர்ச்சி மற்றும் ஒருமைப்பாட்டு
ஒத்துழைப்பு நிறுவனம் ஆகியவை திருப்பீடத்துடன் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. “வேளாண்மையும்
உறுதியான சமூகங்களும் : உணவுப் பாதுகாப்பு, நிலம் மற்றும் தோழமை” என்ற தலைப்பில் ரியோ
டி ஜெனிரோவில் திருப்பீடத்தின் இந்நிகழ்வு நடைபெறும்.ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்துக்கு
அறநெறி சார்ந்த, நடைமுறைக்கு ஏற்ற மற்றும் உறுதியான தீர்மானங்கள் குறித்து இத்திருப்பீட
நிகழ்வில் பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்கப்படும்.