நேர்காணல் – இயேசு சபை அருள்தந்தை பியர் சிராக், ஒரு சகாப்தம் பாகம் 1
ஜூன்07,2012. நேயர்களே, இயேசு சபை அருள்தந்தை ஹென்ரி ஜெரோம் அனைத்துலக கத்தோலிக்க கல்லூரி
மாணவர் இயக்கத்தின் ஆன்மீக வழிகாட்டி. AICUF என்ற இந்திய தேசிய கத்தோலிக்க கல்லூரி மாணவர்
இயக்கத்தின் ஆலோசகராகவும் பணியாற்றியிருப்பவர். சென்னை இலொயோலா கல்லூரியில், இயேசு சபை
இளம் குருமாணவர்களின் தலைவராகவும் பணியாற்றும் இவர், பிரான்ஸ் நாட்டு இயேசு சபை அருள்தந்தை
சிராக் பியர் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். தனது 98வது வயதில் இந்த மே 30ம்
தேதி சென்னையில் இறைபதம் அடைந்த அருள்தந்தை சிராக் பியர் அவர்கள் பற்றி அருள்தந்தை ஹென்ரி
ஜெரோம் அவர்களிடம் தொலைபேசியில் கேட்டோம்.