2012-06-07 15:19:20

அமெரிக்காவில் மதச்சுதந்திரத்திற்காக எழுந்து நில்லுங்கள் அமைப்பின் இரண்டாவது போராட்டம்


ஜூன்,07,2012. ‘மதச்சுதந்திரத்திற்காக எழுந்து நில்லுங்கள்’ என்ற அறைகூவலுடன் அமெரிக்காவில் இயங்கும் ஓர் அமைப்பு இவ்வெள்ளியன்று தன் இரண்டாவது போராட்டத்தை நடத்த உள்ளது.
கருக்கலைப்பையும், கருத்தடையையும் நலக் காப்பீட்டுத் திட்டத்தில் அமெரிக்க அரசு இணைக்கும் முயற்சிகளுக்கு எதிராக இயங்கும் இவ்வமைப்பு மேற்கொண்ட முதல் போராட்டம் அமெரிக்காவில் மார்ச் 23ம் தேதி நிகழ்ந்தது. அந்நாட்டின் 28 ஆயர்கள் இணைந்த இந்த போராட்டத்தில், 145 நகரங்களைச் சேர்ந்த 64,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் என்று கத்தோலிக்க செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
இவ்வெள்ளியன்று நடைபெறும் போராட்டத்தில் அமெரிக்காவின் 49 மாநிலங்களைச் சேர்ந்த 154 நகரங்கள் பங்கேற்க உள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 8ம் தேதி நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ஆயர்களுடன் கத்தோலிக்கர்கள் இணைந்து, மதச்சுதந்திரம் பற்றிய கருத்தரங்குகளை இருவாரங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.