2012-06-05 15:02:40

கவிதைக் கனவுகள்... இயற்கை


எழுத்து.காம் என்ற இணையதளத்தில் ஹரி ஹர நாராயணன் என்பவர் எழுதிய கவிதையின் ஒரு சில பகுதிகள்...

அமைதியாக
ஆட்சி செய்தது
இயற்கை.........!
விழிகள் உளிகளாக மாறி
செதுக்காதப் பாறைகளில்
சிலை வடிக்கத் தொடங்கியது..!
சிறகுகள் வேண்டாம்..
பறப்பதற்கு
சிந்தனை போதும் வாருங்கள்..!
விட்டில் பூச்சிகளுக்கு
தொட்டில் அமைத்துக் கொடுத்தது
துளசிச் செடிகள்..!
செடிகளுக்கு நடுவே
சித்திர வேலை
செய்தது சிலந்திப் பூச்சிகள்..!
பூமிக்கு
மஞ்சள் பூசியது
வெயில்...!
நிச்சயமாக
நிலத்தின் மச்சங்கள்...
நீண்ட மலைத்தொடர்கள்..!
பூமிக்குள்
புதையலைக் கண்டுபிடித்து
பூக்களாக
கொட்டிக் கொண்டிருந்தது வேர்கள்...!
மரங்கள் போட்டுக்கொண்ட
மருதாணி போலிருந்தது
கரையான்கள் கட்டிய கோட்டைகள்..!
கோடி அழகைக் கொட்டி வைத்திருக்கிறது
இயற்கை.......! - அதை
கொடுத்து வைத்தவர்கள் மட்டுமே, கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்...







All the contents on this site are copyrighted ©.