2012-06-02 14:58:27

பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுமாறு அயர்லாந்து ஆயர் பரிந்துரை, செபம்


ஜூன்02,2012. சமுதாயத்தில், ஒருவர் மற்றவர் மீது அக்கறை காட்டுவது எல்லா மதத்திலும் வலியுறுத்தப்படும் அடிப்படை மனித மதிப்பீடு என்று அயர்லாந்து ஆயர் ஒருவர் கூறினார்.
அரையாண்டு வங்கி விடுமுறையையொட்டி வாகன ஓட்டுனர்களுக்காகச் செபம் ஒன்றையும் வெளியிட்டுள்ள ஆயர் Liam MacDaid, ஒருவர் மற்றவர் மீது அக்கறை காட்டுவது, நாம் சாலைகளைப் பயன்படுத்தும் விதத்திலும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
ஒருவர் மற்றவர் மீது அக்கறை காட்டுவது ஒவ்வொருவரின் கடமை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆயர், சாலை விபத்துக்கள் மற்றும் வாகன விபத்துக்களில் மனித வாழ்வு பறிக்கப்படும்போது அது எல்லாருக்குமே வேதனையைத் தருகின்றது என்று தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.