2012-06-01 16:07:20

மேற்குலகில் குடியேற்றதாரர்கள் அனுபவித்துள்ள பேரச்சங்கள் குறித்து ஆயர்கள் கவலை


ஜூன்01,2012. மேற்கத்திய உலகில் குடியேற்றதாரர்கள் அனுபவித்துள்ள பேரச்சங்களுக்குக் காரணமான சக்திகளை, வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்க ஆயர்களும் கரீபியன் பகுதி ஆயர்களும் கண்டித்துள்ளனர்.
வறுமையின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி அன்றாட உணவுக்கான வழிகளைத் தேடுகின்றனர் என்றுரைத்த ஆயர்கள், குடியேற்றதாரர் குறித்த சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், இந்தக் குடியேற்றத்துக்கான அடிப்படை பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், மக்கள் தொடர்ந்து பெருமெண்ணிக்கையில் தங்கள் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறுவார்கள் என்றும் எச்சரித்தனர்.
தொமினிக்கன் குடியரசின் Santo Domingo வில் இவ்வாரத்தில் கூட்டத்தை நிறைவு செய்த பின்னர் அறிக்கை வெளியிட்ட ஆயர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ வழியாக அமெரிக்க ஐக்கிய நாடு செல்லும் மத்திய அமெரிக்க நாடுகளின் மக்கள் எதிர்கொள்ளும் கடுந்துன்பங்களையும் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர் ஆயர்கள்.







All the contents on this site are copyrighted ©.