2012-06-01 16:11:53

பிரிட்டனில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டவர்களை இலங்கைக்கு அனுப்பக் கூடாது


ஜூன்01,2012. பிரிட்டனில் இருந்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட சிலர் அந்நாட்டை அடைந்ததும் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாவது கடந்த ஈராண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வருவதால், அடைக்கலம் தேடும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாமென Human Rights Watch (HRW) என்ற மனித உரிமைகள் கழகம் கேட்டுள்ளது.
புகலிடம் தேடும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களை அவர்கள் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதை பிரிட்டன் அரசு உடனடியாக நிறுத்தவேண்டுமெனவும், இவ்விவகாரத்தில் பிரிட்டன் அரசு தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்யவேண்டுமெனவும் அம்மனித உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
பல தமிழர்கள் இவ்வியாழனன்று இலண்டன் விமானநிலயத்திலிருந்து கட்டாயமாக கொழும்புவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்ற செய்தி வெளியானதையொட்டி இவ்வாறு அக்கழகம் கோரியுள்ளது.
பிரிட்டன் எல்லைப்புற நிறுவனத்தால் கடந்த ஆண்டில் 555 பேர் கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.