2012-06-01 16:02:45

துன்பங்கள் நிறைந்த உலகில் குடும்பம் பாதுகாப்பான இடம் – கர்தினால் தெத்தமான்சி


ஜூன்01,2012. உழைப்பாளர்கள் அடிக்கடி பெருந்துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும்வேளை, வருங்காலத்துக்குரிய நம்பிக்கை குடும்பங்களிலிருந்து பிறக்கின்றது என்று மிலானின் முன்னாள் பேராயர் கர்தினால் Dionigi Tettamanzi கூறினார்.
மிலான் நகரில் நடைபெற்று வரும் ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டின் கருப்பொருளின் அர்த்தம் குறித்து விளக்கிய கர்தினால் Tettamanzi, தொழிலுக்கு அர்த்தத்தையும், இடைவிடாத தொடர்பையும் பயனுறுதியையும் கொடுக்கும் இடம் குடும்பம் என்று கூறினார்.
தயாரிப்பு மற்றும் முதலீட்டைச் சார்ந்து இருக்காமல் மனித முதலீட்டை உருவாக்குவதிலேயே இக்காலத்தில் கவனம் செலுத்தப்படுவதால், தொழிலுக்குத் தரத்தை வழங்குவது குடும்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த மே 30ம் தேதியன்று தொடங்கிய ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாடு, இஞ்ஞாயிறன்று நிறைவு பெறும்.







All the contents on this site are copyrighted ©.