2012-05-30 16:06:50

தமிழ் கைதிகளின் விடுதலை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்


மே,30,2012. சிறைகளில் விசாரணைகளின்றி நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
அரசியல் கைதிகளாக இருந்த சிங்கள இளையோர், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ள இலங்கை அரசு, தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டும் பொது மன்னிப்பு வழங்க முன்வராமலிருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளாகிய தமிழ் இளைஞர்களைப் பயங்கரவாதிகள் எனக் குறிப்பிடாமல் அவர்களைத் தமிழ் அரசியல் கைதிகளாகவே குறிப்பிடவேண்டும் என்றும் அவ்வாறே அவர்களை நடத்தவேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.