2012-05-29 15:26:17

யாழ்ப்பாணப் பகுதியில் மட்டும் 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம்பெயர்ந்தோராக வாழ்கின்றனர்


மே29,2012. யாழ்ப்பாணப் பகுதியில் மட்டும் 12 ஆயிரத்து 459 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 559 பேர் தொடர்ந்து புலம்பெயர்ந்தோராக வாழ்ந்து வருவதாக புலம்பெயர்ந்தோர் நலப்பணி அமைப்புக்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 53 நலப்பணி நிலையங்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் அடைக்கலம் பெற்று வாழ்ந்து வருவதாகவும் அந்த அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கடும்பாதுகாப்புப் பகுதியாக தொடர்ந்து பேணப்பட்டுவரும் வலிகாமம் வடக்குப் பகுதியில் மீள்க்குடியமர, சுமார் 9 ஆயிரத்து 904 குடும்பங்களை சேர்ந்த 31ஆயிரத்து 524 பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து, காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.