சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை இன்னும் அதிக நாடுகள் அமல்படுத்துமாறு ஐ.நா.கோரிக்கை
மே26,2012. சிறார் விற்பனை, சிறார் விபசாரம், சிறாரைப் பாதிக்கும் பாலின ஊடகங்கள் ஆகியவற்றிலிருந்து
அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் உரிமைகளை அமல்படுத்துவதற்கு இன்னும் அதிக நாடுகள் முன்வர
வேண்டுமென்று ஐ.நா.கேட்டுள்ளது. சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தை மேலும் 20 நாடுகள்
அமல்படுத்தியுள்ளவேளை, ஆயுதம் தாங்கிய மோதல்கள் இடம்பெறும் இடங்களில் சிறார் உரிமைகளைப்
பாதுகாப்பதற்கு 15 நாடுகள் முன்வந்துள்ளதை முன்னிட்டு இவ்வாறு கேட்டுள்ளது ஐ.நா. 18
வயதுக்குட்பட்ட சிறாரைப் படையில் சேர்க்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தையும் நாடுகள் நடைமுறைப்படுத்துமாறு
வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலரின் பிரதிநிதி இராதிகா குமாரசாமி.