காட்சிகள், திருவெளிப்பாடுகள் குறித்த திருப்பீடத்தின் வழிமுறைக் கையேடு
மே26,2012. தங்களுக்குக் காட்சி கிடைத்ததாகவும் திருவெளிப்பாடுகளைப் பெற்றதாகவும் தனிப்பட்டவர்கள்
சொல்லும் போது அவற்றைக் கையாள்வதற்கு உதவும் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப்
பேராயம். காட்சிகள், திருவெளிப்பாடுகள், இயல்புக்கு மாறான அசாதாரணக்கூறுகள் குறித்த
அறிவிப்பு ஆகியவற்றைத் தேர்ந்துதெளியும் திருஅவை அதிகாரிகளின் கடினமான பணிக்கு இக்கையேடு
உதவும் என்று, இக்கையேட்டுக்கு முன்னுரை எழுதியுள்ள திருப்பீட விசுவாசக்கோட்பாட்டுப்
பேராயத் தலைவர் கர்தினால் வில்லியம் லெவாடா தெரிவித்தார். 1978ம் ஆண்டிலிருந்து பேராயத்துக்குள்
கையாளப்பட்டு வரும் இது குறித்த விதிமுறைகள், இலத்தீனிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டு
தற்போது முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.