இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் திருத்தந்தை உதவி
மே26,2012. அண்மையில் இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Carpi, Mantua, Modena,
Ferrara-Comacchio-Nonantola ஆகிய மறைமாவட்டங்களுக்குத் திருத்தந்தை ஒரு இலட்சம் யூரோக்களை
அனுப்பத் திட்டமிட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பீடத்தின் Cor Unum
என்ற பிறரன்பு அவையின் மூலம் அனுப்பவுள்ள இவ்வுதவி, பாதிக்கப்பட்ட அம்மறைமாவட்டங்களின்
நிவாரணப்பணிகளுக்கு உதவும் என்றும், இந்த உதவியானது, பாதிக்கப்பட்ட மக்களுடன் திருத்தந்தை
கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும் இருக்கின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.