2012-05-24 16:00:41

மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை வீடுகளுக்கே சென்று பெற்றுக்கொள்ளும் புதிய முயற்சி


மே24,2012. வீடுகளுக்கே சென்று மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளை பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை அளிக்கும் ஒரு புதிய முயற்சியில் சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பட்டதாரி தம்பதியினர் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக பிளாஸ்டிக், ரப்பர், காகிதம், இரும்பு, அலுமினியம் போன்று மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை, வீடுகளுக்கே சென்று பெற்றுவரும் ஒரு திட்டத்தை ஜோசஃப் ஜெகன் மற்றும் சுஜாதா தம்பதியினர் இணையதளம் மூலம் மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார்கள்.
இந்தியாவில் குப்பைகளை அகற்றுவது ஒரு பெரும் பிரச்சினையாக இருப்பதாலும், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் சிறுவணிகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும் தம்மால் எடுக்கப்பட்டுவரும் புது முயற்சிக்கு வரவேற்பு இருப்பதாக ஜோசஃப் ஜெகன் தெரிவித்தார்.
சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 3200 மெட்ரிக் டன்கள் அளவுக்கு குப்பைகள் சேர்வதாக மாநகராட்சி கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.








All the contents on this site are copyrighted ©.