2012-05-24 16:02:56

பல்கேரியா, மாசிடோனியா அரசுத்தலைவர்கள், திருத்தந்தை சந்திப்பு


மே24,2012. இவ்வியாழனன்று பல்கேரிய நாட்டு அரசுத்தலைவர் Rossen Plevneliev, மாசிடோனியக் குடியரசுத் தலைவர் Nikola Guevski ஆகியோரையும் தனித்தனியே திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஐரோப்பாவின் இணைப்பாதுகாவலர்கள் புனிதர்கள் சிரில்,மெத்தோடியஸ் ஆகியோரின் விழாக்களையொட்டி இவ்விரு நாடுகளின் தலைவர்களும் திருத்தந்தையையும், பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தனர்.








All the contents on this site are copyrighted ©.