2012-05-22 15:19:17

கவிதைக் கனவுகள் - புனிதப் போன்னாலயம்


புனிதப் போன்னாலயம் சென்றிடுவோம்
இனிய இசையுடனே அணிவருவோம்

இறைவனின் ஆலயம் பேரவையாம்
நிறையருள் சேர்ந்திடும் பேரணையாம்
ஆனந்தம் பொங்கிடும் திருச்சுனையாம்
கானங்கள் முழங்கிடும் அருள்மனையாம்

அமைதியும் நீதியும் உயர்த் தூண்களாம்
இணையிலா அறநெறி கோபுரமாம்
அண்ணலின் அருளொளி விடிவிளக்காம்
இன்னலில் துணைவரும் ஓளிவிளக்காம்

புனிதப் போன்னாலயம் சென்றிடுவோம்
இனிய இசையுடனே அணிவருவோம்








All the contents on this site are copyrighted ©.