2012-05-21 15:07:21

'கருக்கலைப்பு அற்ற இரஷ்யா' - இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை மக்கள் மாஸ்கோ நகரில் போராட்டம்


மே,21,2012. 'கருக்கலைப்பு அற்ற இரஷ்யா' என்ற அறைகூவலை மையமாகக் கொண்ட ஒரு போராட்டத்தை இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் (பழமைக் கொள்கை/பழமைவாத) கிறிஸ்தவ சபை மக்கள் இஞ்ஞாயிறன்று மாஸ்கோ நகரில் மேற்கொண்டனர்.
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் Kirill அவர்களுக்கு எதிராக ஊடகங்கள் அண்மையில் வெளியிட்டுள்ள அவதூறான செய்திகளை மறுத்து, குல முதுபெரும் தலைவருக்கு ஆதரவு தெரிவித்தும், கருக்கலைப்புக்கு எதிராகவும் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தில் 300க்கும் அதிகமான வாகனங்கள் கலந்து கொண்டன.
'கருக்கலைப்பு அற்ற இரஷ்யா', 'முதுபெரும் தலைவர் Kirill அவர்களுக்கு ஆதரவு', 'உறுதியளித்த 200 கோவில்களை அரசு கட்டித் தரவேண்டும்' என்ற பல கோரிக்கைகள் அடங்கிய வாசகங்களைத் தாங்கியபடி இந்த போராட்ட ஊர்வலம் மாஸ்கோ சாலைகளில் சென்றதென்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஆர்த்தடாக்ஸ் கொள்கைகளை இரஷ்ய அரசிடமிருந்து காக்கவேண்டும் என்று முதுபெரும் தலைவர் Kirill விடுத்த அழைப்பை ஏற்று ஏப்ரல் மாதம் 22ம் தேதி 40,000க்கும் அதிகமான இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மாஸ்கோவின் கிறிஸ்து மீட்பர் பேராலயத்திற்கு முன் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.