2012-05-19 15:36:40

கவிதைக் கனவுகள் வாழ்க்கை... ஒரு சதுரங்க ஆட்டம்


'தாயம்' என்ற நூலில் டி.டி.ரங்கராஜன் எண்ணங்களில் எழுந்த வரிகள்...
தமிழாக்கம்:நாகலட்சுமி சண்முகம்

வாழ்க்கை என்பது
ஒரு சதுரங்க ஆட்டத்தைப் போன்றது,
இதில் நீங்கள் ஆடப் போவது ஆண்டவனுடன்.

உங்களுடைய நகர்த்தலுக்குப் பிறகு
அவர் தன் காயை நகர்த்துவார்.
உங்களுடைய நகர்த்தல்களுக்கு
'விருப்பத் தேர்வுகள்' என்று பெயர்.
அவருடைய நகர்த்தல்களுக்கு
'விளைவுகள்' என்று பெயர்.

நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்.
சவாலுக்கு அழைக்கப்படுவீர்கள்.
விளிம்புவரை தள்ளப்படுவீர்கள்.

ஆட்டத்தை நன்றாக ஆட
நீங்கள் கற்றுக் கொண்டால்,
உங்களை வெற்றியடைய அனுமதிப்பதன் மூலம்
'அவர்' வெற்றி பெறுவார்.








All the contents on this site are copyrighted ©.