2012-05-18 15:54:37

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்


மே 18,2012 தங்களை விசாரிக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இலங்கையின் கொழும்பு சிறையிலுள்ள தமிழ்க் கைதிகள் உண்ணாநோன்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் உட்பட 190 க்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் கொழும்பு சிறையில் இந்த உண்ணாநோன்பு போராட்டத்தைத் இவ்வியாழனன்று ஆரம்பித்துள்ளனர்.
இலங்கைப் போர் முடிந்து இவ்வெள்ளியோடு மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்நடவடிக்கையத் தொடங்கியுள்ள தமிழ்க் கைதிகள், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த தாங்கள், புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.