நேர்காணல் – இலங்கையில் போர் முடிந்த மூன்றாம் ஆண்டு நினைவு
மே17,2012. 2009ம் ஆண்டு மே 18 இலங்கைத் தமிழருக்கு இருண்ட நாள், துக்க நாள். சுமார்
30 ஆண்டுகளாகப் போர்க்களப் பூமியாக இருந்து, இன்றைக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மரண
பூமியாக மாறிய இடம் ஈழத்தில் இன்று மயான பூமியாகக் காட்சியளிக்கிறது. எவ்வளவு நறுமணத்
திரவியங்களைத் தெளித்தாலும் மரணக்கறை மறையாத இடமாக, ஓடிய இரத்த ஆறுகளில் கேட்ட ஓலங்கள்
தொடர்ந்து ஒலிக்கும் இடமாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் இடம் பெற்ற இறுதிப்
போரின் போது முள்ளிவாய்க்கால் பேரழிவு இடம் பெற்ற பகுதியில் மக்களோடு கடைசி வரை இருந்த
அருட்பணியாளர்களில் ஒருவர் அருட்பணி அ.பணி ஆன்டன். அவரோடு ஒரு நேர்காணல்