2012-05-16 15:35:41

பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பு - கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம்


மே,16,2012. இதற்கிடையே, மக்கள்தொகை அதிகம் உள்ள கராச்சி நகரில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஒரு திட்டத்தை பாகிஸ்தானில் பணிபுரியும் காரித்தாஸ் அமைப்பு இத்திங்களன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கழிவுப்பொருட்களைத் திறந்த வெளிகளில் கொட்டாமல் இருப்பது, கழிவுப் பொருட்களிலிருந்து எரிசக்தியை உருவாக்குவது, வீட்டைச் சுற்றி காய்கறி செடிகளை நடுவது போன்ற செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று காரித்தாஸ் செயலர் Dominic Gill கூறினார்.
திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பை மேடுகளில் குழந்தைகள் விளையாடுவதால், அவர்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் உருவாகி வந்ததும் இத்திட்டத்தினால் தடுக்கப்படும் என்று காரித்தாஸ் அலுவலர் Ayub Shafi எடுத்துரைத்தார்.
கராச்சி நகரில் மட்டும் ஒருநாளைக்கு உருவாகும் கழிவுப் பொருட்களின் எடை 9000 டன்னுக்கும் அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.