2012-05-15 15:32:50

சீனாவில் உள்ள மரியன்னை திருத்தலத்தில் 20000க்கும் அதிகமான திருப்பயணிகள்


மே,15,2012. சீனாவின் Cang Zhou மறைமாவட்டத்தில் உள்ள மரியன்னை திருத்தலத்தில் 20000க்கும் அதிகமான திருப்பயணிகள் கலந்து கொண்ட ஒரு திருப்பலியை பேராயர் Joseph Li Lian Gui தலைமையேற்று நடத்தினார் என்று Fides செய்தி கூறுகிறது.
மேலும் Hu Xian எனுமிடத்தில் உள்ள மற்றொரு மரியன்னை திருத்தலத்திற்கும் 10000க்கும் அதிகமான விசுவாசிகள் திருப்பணயம் மேற்கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
சீனத் திருஅவைக்காக சிறப்பு செபங்கள் எழுப்பப்படும் ஒரு நாளாக மேமாதம் 24ம் தேதியை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அறிவித்துள்ளதையொட்டி, சீன மக்களிடம் இந்த ஆர்வம் தூண்டப்பட்டுள்ளது என்று இத்திருப்பயணத்தில் பங்கேற்றோர் கூறியதாகவும் Fides செய்தி கூறியது.
மரியன்னையின் பரிந்துரை வழியாக, சீனத் திருஅவை சந்தித்து வரும் அனைத்துப் பிரச்சனைகளும் தீந்துவிடும் என்ற செய்தி திருப்பயணிகளுக்கு வழங்கப்பட்டது என்றும் இச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.