2012-05-15 15:31:13

கண்ணூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Varghese Chakkalakal


மே,15,2012. கேரளாவின் கண்ணூர் மறைமாவட்டத்தின் ஆயரான Varghese Chakkalakal அவர்களை கோழிக்கோடு மறைமாவட்டத்தின் ஆயராகவும், கண்ணூர் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இச்செவ்வாயன்று நியமித்தார்.
1953ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி Malapallipuram என்ற ஊரில் பிறந்த Varghese Chakkalakal, 1981ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
1998ம் ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் இவர் கண்ணூர் மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்று, 1999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆயராகத் திருநிலைப் படுத்தப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.