2012-05-14 14:58:42

இயேசுவின் போதனைகளின் வழியில், கடவுளுக்கும் மனிதருக்கும் தொடர்ந்து சேவை செய்யுமாறு திருத்தந்தை அழைப்பு


மே 14,2012. இயேசுவின் போதனைகள், டஸ்கன் பகுதித் தூயவர்கள் மற்றும் அப்பகுதி மக்களின் மரபுகளின்படி கடவுளுக்கும் மனிதருக்கும் தொடர்ந்து சேவை செய்து வருமாறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் மக்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Arezzoவில் திருப்பலியை நிறைவு செய்த பின்னர் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, அப்பகுதி மக்கள் அன்பு செய்து போற்றும் ஆறுதல் அன்னையின் தாய்க்குரிய அரவணைப்பில் அனைவரையும் ஒப்படைப்பதாகக் கூறி அனைவரோடும் சேர்ந்து அல்லேலூயா வாழ்த்தொலி செபத்தையும் செபித்தார்.
ஒருநாள் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை முடித்து, இஞ்ஞாயிறு இரவு வத்திக்கான் திரும்பினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.