இந்து தலித் மக்கள் அனுபவிக்கும் அடக்குமுறைகளை கிறிஸ்தவ தலித் மக்களும் அனுபவிக்கின்றனர்
– இந்திய மத்திய அமைச்சர்
மே,14,2012. இந்தியாவில் இந்து தலித் மக்கள் அனுபவிக்கும் அடக்குமுறைகளைக் கிறிஸ்தவ தலித்
மக்களும் அனுபவிக்கின்றனர் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார். இச்சனிக்கிழமை
ஹைதராபாதில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்
துறையின் அமைச்சராகப் பணியாற்றும் ஜெய்பால் ரெட்டி, தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகளை நிலைநாட்ட
தன் ஆதரவு உண்டு என்று கூறினார். கிறிஸ்து மலைப்பொழிவில் கூறிய செய்திகள் காந்தியைப்
பெரிதும் பாதித்தன என்பதைக் கூறிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தன்னலமின்றி எளியோர் சேவையில்
ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ அமைப்புக்களைப் பாராட்டினார். இந்து தலித் மக்களுக்கு தரப்படும்
அனைத்து சலுகைகளும் கிறிஸ்தவ தலித்துகளுக்கும் கிடைப்பதற்கு தான் முயற்சி செய்வதாக ஆந்திர
மாநில வீட்டுவசதித் துறையின் அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி இக்கருத்தரங்கில் உறுதி அளித்தார்.