வட கொரியாவுடன் உரையாடலை ஊக்குவிப்பது, வாழ்வைப் பாதுகாப்பது, செயோல் புதிய பேராயரின்
நோக்கம்
மே 12,2012. வட கொரியாவுடன் உரையாடலை ஊக்குவிப்பது, உலகாயுதப் போக்கு அதிகரித்து வரும்
சமுதாயத்தில் மனித வாழ்வின் புனிதத்தைப் பாதுகாப்பது போன்ற விவகாரங்களுக்கு அதிக அழுத்தம்
கொடுக்கவிருப்பதாக தென் கொரியப் பேராயர் ஒருவர் கூறினார். தென் கொரியத் தலைநகர் Seoul
ன் புதிய பேராயராக நியமனம் பெற்றுள்ள பேரருட்திரு Andrew Yeom Soo-jung, நமது சமுதாயத்தின்
உலகாயுதப் போக்குக்கு எவ்வாறு பதில் சொல்வது, வட கொரியாவுடன் எவ்வாறு அமைதியாக வாழ்வது
போன்றவைகளில் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது என்று கூறினார். உயிரியல் ஒழுக்கநெறிகளுக்கு
ஆதரவாகவும், வட கொரியாவுடன் உரையாடலை மேற்கொள்ளவும் ஏற்கனவே முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்
Seoul புதிய பேராயர் Yeom Soo-jung.